செய்திகள்

விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்ததால் தோல்வி: காம்பீர்

Published On 2017-05-20 10:05 GMT   |   Update On 2017-05-20 10:05 GMT
2-வது தகுதி சுற்று போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்ததால் தோல்வியடைந்ததாக கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் கூறினார்.

2-வது தகுதி சுற்று போட்டியில் மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது:-

கடந்த போட்டியில் விளையாடியபோது (ஐதராபாத்துக்கு எதிராக) இந்த ஆடுகளத்தில் 160 ரன் எடுக்க முடியாது என்ற விவாதித்தோம். 140 ரன் எடுக்க இலக்கை நிர்ணயித்து இருந்தோம். ஆனால் நிறைய விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்து விட்டோம். 107 ரன் என்பது நல்ல ஸ்கோர் கிடையாது. அதை வைத்து கொண்டு எதிரணியை ஆல்-அவுட் ஆக்குவது கடினம்.

எங்களால் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை வெளிப்படுத்தினோம். அதற்காக பெருமைப்படுகிறோம். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்துக்குள் வர எங்களுக்கு 2 வாய்ப்பு கிடைத்தது. அதை தவற விட்டுவிட்டோம் என்றார்.
Tags:    

Similar News