செய்திகள்

3-வது டெஸ்ட் போட்டி: மதிய தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 194/4

Published On 2017-03-16 08:49 GMT   |   Update On 2017-03-16 08:49 GMT
ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல்நாள் மதிய தேனீர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சரியாக 50 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய ரென்ஷா 44 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷேன் மார்ஷை (2) வந்த வேகத்திலேயே அஸ்வின் வெளியேற்றினார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.



ஸ்மித் 34 ரன்னுடனும் ஹேண்ட்ஸ்காம்ப் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக விளையாடி 104 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



முதல் நாள் தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 80 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News