செய்திகள்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் ஓவரிலேயே துவக்க வீரரை இழந்தது இந்தியா

Published On 2017-02-09 10:18 IST   |   Update On 2017-02-09 10:18:00 IST
இந்தியா, வங்காளதேச கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்திய அணி முதல் ஓவரிலேயே துவக்க வீரரை இழந்தது.
ஐதராபாத்:

முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று காலை தொடங்கியது.

இந்திய அணியில் ரகானே காயமடைந்திருந்தபோது, அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். ஆனாலும், நிலையான இடத்தைப் பிடித்துள்ள ரகானேவை புறந்தள்ளிவிட முடியாது என்று கேப்டன் கோலி கூறியிருந்தார். எனவே, காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ரகானே சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயருக்கு வாய்ப்பு இல்லை.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர் லோகேஷ் ராகுல், முதல் ஓவரில் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில், தஸ்கின் அகமதுவிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து முரளி விஜய், புஜாரா இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

2000-ம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்காளதேச அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

Similar News