செய்திகள்

இந்திய மக்கள் மனதில் சிந்து இடம்பிடித்து விட்டார்: தந்தை பெருமிதம்

Published On 2016-08-20 05:43 GMT   |   Update On 2016-08-20 05:43 GMT
தங்க பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் சிந்து இடம் பிடித்து விட்டார் என சிந்துவின் தந்தை கூறியுள்ளார்
சிந்துவின் தந்தை பி.வி.ரமணா. முன்னாள் கைப்பந்து சர்வதேச வீரர். தாய் விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான். ரமணா தென் மத்திய ரெயில்வேலில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ரமணா கூறியதாவது:-

சிந்து வெள்ளி வென்றதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறந்த வீராங்கனைக்கு எதிராக விளையாடினார். அவருக்கு கடும் சவால் கொடுத்தார். தங்க பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் சிந்து இடம் பிடித்து விட்டார்.

இறுதி ஆட்டத்தில் சிந்து செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கம் வெல்வார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சிந்து பதக்கம் வென்றதே பெருமை அளிக்கிறது. தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய கரோலின் மரின் அதற்கு தகுதியானவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News