செய்திகள்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி வாழ்த்து
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக ராகேஷ் குப்தா தலைமையிலான இந்திய அணி பிரேசில் சென்றுள்ளது. விரைவில் போட்டி தொடங்க உள்ள நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அணி தலைவர் ராகேஷ் குப்தாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:-
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய வீரர் வீராங்கனைகள் மற்ற நாடுகளின் விளையாட்டு வீரர்களுடன் ஒற்றுமை மற்றும் நட்பை ஊக்குவிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை காட்ட, பல்வேறு விளையாட்டு துறைகளில் தங்களை நிரூபிக்க ஒலிம்பிக் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது வீரர்கள் சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக ராகேஷ் குப்தா தலைமையிலான இந்திய அணி பிரேசில் சென்றுள்ளது. விரைவில் போட்டி தொடங்க உள்ள நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அணி தலைவர் ராகேஷ் குப்தாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:-
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய வீரர் வீராங்கனைகள் மற்ற நாடுகளின் விளையாட்டு வீரர்களுடன் ஒற்றுமை மற்றும் நட்பை ஊக்குவிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை காட்ட, பல்வேறு விளையாட்டு துறைகளில் தங்களை நிரூபிக்க ஒலிம்பிக் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது வீரர்கள் சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.