2025 - ஒரு பார்வை

2025 REWIND: கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றிகள் நிறைந்த ஆண்டு

Published On 2025-12-09 18:19 IST   |   Update On 2025-12-09 18:19:00 IST
  • 27 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது.
  • இந்தியா முதல் முறையாக மகளிர் ஒருநாள் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

2025-ம் ஆண்டில் கிரிக்கெட் தொடரில் நடந்த வரலாற்று வெற்றிகள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம். அதன்படி இந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

 இத்தொடரில், இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தனது மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றதன் மூலம் அதிக முறை இப்பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது. இது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்ற ஒரு முக்கிய ஐசிசி கோப்பையாகும்.

ஐபிஎல் 2025 தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.


இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.


இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன் கடைசியாக 1998-ம் ஆண்டில் ஐசிசி நாக்-அவுட் டிராபியை தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது.

மகளிர் உலகக் கோப்பை செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.


இதில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, உலகக் கோப்பைப் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் ஆண் அல்லது பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.


தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.


இதன் மூலம் ஆசிய கோப்பையை வென்று தனது அதிக வெற்றிகள் சாதனையை (மொத்தம் 9 முறை) தொடர்ந்தது.

பார்டர் -கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் (2024-2025) நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு (2014-15க்குப் பின்) இந்தத் தொடரை வென்று, கோப்பையை மீட்டெடுத்தது. இந்தியா தொடர்ச்சியாக இரு முறை (2018-19, 2020-21) ஆஸ்திரேலியாவில் வென்றிருந்த நிலையில், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டது.

Tags:    

Similar News