இந்தியா

சாக்லேட் ஐஸ்கிரீமை பயன்படுத்தி தலைமுடிக்கு வண்ணம் தீட்டிய பெண்

Published On 2024-03-22 05:54 GMT   |   Update On 2024-03-22 05:54 GMT
  • வீடியோ இணையத்தில் வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் குவித்துள்ளது.
  • வீடியோவை பார்த்த பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வினோதமான விஷயங்களை முயற்சிப்பதில் இளைஞர்களை போலவே சில இளம்பெண்களும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அவ்வாறாக வித்தியாசமான செயல்களை செய்து வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். அவற்றில் சில விமர்சனங்களுக்குள்ளாகிறது. சில வீடியோக்கள் வைரலாகி வரவேற்பை பெறும்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாக்லேட் ஐஸ்கிரீமை பயன்படுத்தி தனது தலைமுடிக்கு வண்ணம் தீட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், இளம்பெண் ஒருவர் கையில் 3 குச்சி ஐஸ் பாக்கெட்டுகளை எடுக்கிறார். பின்னர் அந்த பாக்கெட்டுகளில் இருந்து ஐஸ்கிரீம்களை எடுத்து சிறிது சாப்பிடுகிறார்.

பின்னர் அந்த ஐஸ்கிரீம்களை உடைத்து தனது தலைமுடியில் சேர்த்து வண்ணம் தீட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த சாக்லேட் ஐஸ்கிரீம்களின் பழுப்பு நிறம் போன்று தலைமுடியும் வண்ணம் பெறுவதற்காக இவ்வாறு 20 நிமிடங்கள் செய்ய வேண்டும் எனவும், அவர் வீடியோவில் கூறுவது போன்று காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், இவ்வாறு முயற்சி செய்யும் நீங்கள் எவ்வளவு முட்டாள் தனமாக இருக்க முடியும் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News