இந்தியா

ரெயில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்

Published On 2022-11-18 15:02 IST   |   Update On 2022-11-18 15:02:00 IST
  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஜூலி குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜூலி குமாரி மற்றும் குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

திருப்பதி:

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜூலி குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜார்க்கண்ட்டில் இருந்து தன்பாத் அலுப்பி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஜூலி குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

அலறி துடித்த ஜூலி குமாரி அங்கிருந்த கழிவறைக்கு சென்றார். ஜூலி குமாரி பிரசவ வலியால் துடிப்பதை கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.

இருப்பினும் கழிவறைக்குச் சென்ற ஜூலி குமாரிக்கு அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜூலி குமாரி மற்றும் குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Similar News