இந்தியா

திருப்பதி கோவிலுக்கு காரில் வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-04-22 10:24 IST   |   Update On 2025-04-22 10:24:00 IST
  • எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும்.
  • நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கோடை வெப்பம் காரணமாக சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் வந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதுகுறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கை படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் வெப்பம் அடைகிறது. மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் காரை நிறுத்தி அணைத்து வைக்க வேண்டும்.

எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News