இந்தியா

25 ஆண்டுக்கு முன்பு குப்பை தொட்டியில் வீசப்பட்ட பார்வையற்ற குழந்தை தற்போது அரசு பணிக்கு தேர்வாகி சாதனை

Published On 2025-04-22 05:25 IST   |   Update On 2025-04-22 05:25:00 IST
  • பள்ளி படிப்பை முடித்த மாலா போட்டி தேர்வுக்கு தயாரானார்.
  • மாலாவின் வழிகாட்டியாக சங்கர் பாபா பாபால்கர் என்பவர் இருந்து வருகிறார்.

மும்பை:

25 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் ரெயில் நிலையத்தில் பார்வையிட்ட பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது.

அந்த குழந்தையை போலீசார் மீட்டு ஜல்கானில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிட்டனர். பின்னர் அந்த குழந்தை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டது. பிரெய்லில் உள்ள பள்ளியில் மாலா படித்து வந்தார். பள்ளி படிப்பை முடித்த மாலா போட்டி தேர்வுக்கு தயாரானார்.

தற்போது 26 வயதாகியுள்ள மாலா கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் வைஸ்ன் கமிஷன் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி யடைந்த மாலாவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாக்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணி கிடைத்துள்ளது. அந்த பணியில் மாலா விரைவில் சேரவுள்ளார்.

மாலா இதற்கு முன்பு தாசில்தார் பணிக்கான தேர்வில் 2 முறை தோல்வியடைந்தார். இருந்தாலும் மனம் தளராமல் போராடி போட்டி தேர்வில் வெற்றி பெற்று வருவாய் உதவியாளராக பணியமர்த்தப்பட உள்ளார்.

மாலாவின் வழிகாட்டியாக சங்கர் பாபா பாபால்கர் என்பவர் இருந்து வருகிறார். அவர்தான் தனது குடும்ப பெயரை மாலாவுக்கு சூடியுள்ளார். குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை பசியும், பட்டினியுமாக கிடந்து படித்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்.

குப்பை தொட்டியில் வீசப்பட்டாலும் கோபுரம் போல் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள மாலா மகாராஷ்டிரா மாநிலத்தில் மற்ற குழந்தைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார்.

Tags:    

Similar News