இந்தியா

சத்தீஸ்கரின் புதிய முதல்வராகிறார் வி.டி. சாய்

Published On 2023-12-10 11:22 GMT   |   Update On 2023-12-10 11:22 GMT
  • தேர்தலில் முதல்வர் வேட்பாளரின் பெயரை பா.ஜ.க. அறிவிக்காமலே போட்டியிட்டது
  • 1990ல் அரசியலில் நுழைந்த சாய், நீண்ட கால அரசியல் அனுபவம் உடையவர்

கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17 தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரசும் நேருக்கு நேர் தீவிரமாக களமிறங்கின.

தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. இதில் பா.ஜ.க., பதிவான வாக்குகளில் 46.27 சதவீதம் பெற்று 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையை பெற்றது.

தேர்தல் அறிக்கையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் சாதனைகளும் மட்டுமே தேர்தலில் பா.ஜ.க.வினரால் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளரின் பெயர் அப்போது அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் வெளியான முடிவுகளில் கட்சி அபாரமாக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் வேட்பாளர் குறித்து பல யூகங்கள் நிலவி வந்தன.

இன்று சத்தீஸ்கர் மாநில ராய்பூரில், 54 எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் ராமன் சிங்கிற்கு நெருக்கமானவரும், பா.ஜ.க.வின் தேசிய செயல் கமிட்டியின் உறுப்பினருமான 59 வயதான விஷ்ணு தியோ சாய் (Vishnu Deo Sai), முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1990ல் அரசியலில் ஆர்வத்துடன் நுழைந்தவர் சாய்.

2006ல் பா.ஜ.க.வின் சத்தீஸ்கர் மாநில தலைமை பொறுப்பை ஏற்ற சாய், நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர்.

2023 நவம்பர் தேர்தலில் சாய், சத்தீஸ்கரில் உள்ள குன்குரி (Kunkuri) தொகுதியில் 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்ற சாய், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட சுமார் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.

2014ல் பிரதமராக மோடி பதவியேற்ற பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவையில், சாய் எக்கு துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News