இந்தியா
null

UPI PIN தேவையில்லை... பயோமெட்ரிக் மூலமாக பணப்பரிவர்த்தனை - விரைவில் அமல்

Published On 2025-07-29 14:03 IST   |   Update On 2025-07-29 20:42:00 IST
  • டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80% க்கும் அதிகமானவை UPI மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
  • PIN நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது.

PIN நம்பருக்கு பதிலாக பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது UPI பணபரிவர்தனைக்கு PIN நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை தவிர்த்து கைரேகை, முக அடையாள வசதிகளுடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80% க்கும் அதிகமானவை UPI மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

PIN நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது. பயோமெட்ரிக் முறை இந்த சிக்கல்களை தீர்க்கலாம். ஆகவே PIN நம்பர் முறையை விட இது பாதுகாப்பானதாக இருக்கலாம் ன்று கூறப்படுகிறது.

இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Tags:    

Similar News