இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு- பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி

Published On 2023-02-01 09:53 GMT   |   Update On 2023-02-01 10:08 GMT
  • பாரமுல்லா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • காணாமல் போன மற்ற பனிச்சறுக்கு வீரர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில், சில பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போன மற்ற பனிச்சறுக்கு வீரர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

Tags:    

Similar News