இந்தியா

ராஜஸ்தானில் ஓடும் ரெயில் சக்கரத்தில் தீ விபத்து: பயணிகள் பீதி

Published On 2023-09-15 10:41 GMT   |   Update On 2023-09-15 10:41 GMT
  • ஒரு பெட்டி சக்கரத்தில் தீ எரிவதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
  • தீயணைப்பு கருவி மூலம் சக்கரத்தில் பற்றிய தீயை ஊழியர்கள் அணைத்தனர்.

டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. டவுகா ரெயில் நிலையத்தை நெருங்கும் போது அந்த ரெயிலின் ஒரு பெட்டி சக்கரத்தில் தீ எரிவதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு கருவி மூலம் சக்கரத்தில் பற்றிய தீயை ஊழியர்கள் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. ரெயில் சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்த அதில் பயணம் செய்த பயணிகள் பீதி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News