இந்தியா

உத்தரகாண்டில் கட்டிட தீ விபத்தில் 2 சிறுமிகள் பலி

Published On 2023-04-07 12:48 IST   |   Update On 2023-04-07 12:48:00 IST
  • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
  • கட்டிடத்தில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறினார்கள்.

மாநில பேரிடர் மீட்பு குழுவிற்கும், தீயணைப்பு படை விரைந்து அங்கு உடனடியாக சென்றனர். இந்த தீ விபத்தில் 2 சிறுமிகள் உடல் கருகி பலியானார்கள். அந்த கட்டிடத்தில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News