இந்தியா

நெல்லூர் அருகே ரெயில் மோதி பெண் உட்பட 3 பேர் பலி

Published On 2023-01-22 10:31 IST   |   Update On 2023-01-22 10:31:00 IST
  • தூரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடந்து விடலாம் என வேகமாக சென்றனர்.
  • அதிவேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் மோதியது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஆத்ம குரு பஸ் நிலையம் அருகே சுரங்க ரெயில் பாதை உள்ளது.

சுரங்க ரெயில் பாதையில் நேற்று நள்ளிரவு 1 பெண், 2 ஆண்கள் தண்டவாளத்தை கடந்தனர்.

அப்போது தர்மாவரத்தில் இருந்து நர்சாபூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டு இருந்தது.

தூரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடந்து விடலாம் என வேகமாக சென்றனர்.

அதிவேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பெண் மட்டும் ரெயில் சக்கரத்தில் சிக்கி நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டு உடல் துண்டாகி இறந்தார்.

இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு உடனடியாக ரெயில் நிலைய போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயில் மோதி இறந்த 3 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் நள்ளிரவில் எதற்காக தண்டவாளத்தை கடந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News