இந்தியா

அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது - சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

Published On 2023-08-11 09:14 GMT   |   Update On 2023-08-11 09:14 GMT
  • பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
  • அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது, 'இந்தியா' குறித்து தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு கூறியதை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியுள்ளனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சை தவறாக மேற்கொள் காட்டி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கடந்த 5.8.2023 அன்று சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News