இந்தியா

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

Published On 2023-12-17 04:37 GMT   |   Update On 2023-12-17 04:37 GMT
  • வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
  • காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

திருவனந்தபுரம்:

நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பரிசோதனை மாநிலத்தில் அதிக அளவில் செய்வதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மக்களும் காய்ச்சலுக்காக தங்களை தாங்களே சுயமாக பரிசோதனை செய்வதால் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய விவரம் தெரியவருகிறது. மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனாவிற்கு கோழிக்கோட்டை சேர்ந்த குமரன் (வயது 77) மற்றும் கண்ணூர் பானூரை சேர்ந்த அப்துல்லா (82) ஆகியோர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News