இந்தியா

கேரளாவில் கடனுக்கு லாட்டரி சீட்டு வாங்கிய கூலி தொழிலாளிக்கு ரூ.75 லட்சம் பரிசு

Published On 2023-03-22 04:00 GMT   |   Update On 2023-03-22 04:00 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்க வந்த போது சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார்.
  • முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (வயது 55).

சுமை தூக்கும் தொழிலாளியான இவர் ஆற்றின் குழியில் உள்ள சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில் உறுப்பினராக உள்ளார்.

அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண் ஒருவர் ஒவ்வொரு நாளும் இங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல லாட்டரி சீட்டு விற்க வந்த போது அங்கு சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார். அவரிடம் 2 லாட்டரி சீட்டு வாங்கும் படி அந்த பெண் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த சீட்டுக்களை கடனாக வாங்கி கொண்டார்.

கடனாக வாங்கிய லாட்டரி சீட்டின் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.

இதனை அறிந்து அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். இந்த பணத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றார்.

Tags:    

Similar News