இந்தியா

இளைஞர்கள் கோரிக்கையை ஏற்று அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2022-06-18 05:57 GMT   |   Update On 2022-06-18 06:08 GMT
  • பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக அக்கட்சி ஜெய் ஜவான்.
  • ரெயில் சேவைகள் முடங்கி போய் உள்ளன.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

ரெயிலுக்கு தீ வைப்பு, ரெயில் நிலையங்கள் சூறை என பல்வேறு போராட்டங்களால் ரெயில் சேவைகள் முடங்கி போய் உள்ளன.

இந்த நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்,பி தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக அக்கட்சி ஜெய் ஜவான். ஜெய்கிசான் கொள்கையை அவமதித்து வருகிறது. இதற்கு முன்பு கறுப்பு வேளாண்மை சட்டத்தை மோடி திரும்ப பெற்றார். அதே போல இளைஞர்கள் கோரிக்கையை கனிவுடன் ஏற்று அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் .

Tags:    

Similar News