நிலத்தகராறில் வாலிபர் கொலை: துண்டித்த தலையுடன் செல்பி எடுத்த கும்பல்
- கணு முண்டா வீட்டில் தனியாக இருந்த போது அவரை சாகர் முண்டா தனது நண்பர்களுடன் கடத்தி சென்றார்.
- கணுமுண்டாவின் தந்தை தசாய் முண்டா போலீசில் புகார் செய்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் முர்கு பகுதியைச் சேர்ந்தவர் கணுமுண்டா (20). இவரது குடும்பத்துக்கும் உறவினர் சாகர் முண்டாவுக்கும் நிலத்தகராறு இருந்தது.
இந்த நிலையில் கணுமுண்டா வீட்டில் தனியாக இருந்த போது அவரை சாகர் முண்டா தனது நண்பர்களுடன் கடத்தி சென்றார். இதுகுறித்து கணுமுண்டாவின் தந்தை தசாய் முண்டா போலீசில் புகார் செய்தார். சாகர் மற்றும் அவரது மனைவி, நண்பர்கள் 4 பேரை பிடித்து விசாரணை செய்த போது கணு முண்டாவை தலையை துண்டித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
குமாங்கோப்லா காட்டுப் பகுதியில் கணு முண்டாவின் துண்டிக்கப்பட்ட தலை, உடல் மீட்கப்பட்டது. குற்றவாளிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் துண்டிக்கப்பட்ட கணு முண்டாவின் தலையுடன் செல்வி எடுத்திருப்பது தெரிய வந்தது. மேலும் ரத்தக்கறை படிந்த ஆயுதங்கள், ஒரு கோடாரி, காரும் பறிமுதல் செய்யப்பட்டன.