இந்தியா

ஓடும் ரெயிலில் கொடூரம்- பலமுறை கெஞ்சியும் செல்போன் திருடனை கொன்ற நபர்

Published On 2022-12-19 16:11 IST   |   Update On 2022-12-19 16:11:00 IST
  • ஆத்திரம் தீராத நரேந்திர துபே என்பவர் வாலிபரை அடித்து ரெயிலில் இருந்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.
  • ரெயிலில் இருந்து தள்ளிய போது கம்பத்தில் இடித்து திருடன் உயிரிழந்ததாக உடலை கைப்பற்றிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

பரேலி:

செல்போன் திருடிய வாலிபரை அடித்து உதைத்து ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தள்ளி கொன்ற கொடூரம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் பயணி ஒருவரின் செல்போனை வாலிபர் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது. செல்போனை திருடிய வாலிபரை கண்டுபிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். பலமுறை கெஞ்சியும் ஆத்திரம் தீராத நரேந்திர துபே என்பவர் அந்த வாலிபரை அடித்து ரெயிலில் இருந்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.

ரெயிலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட போது கம்பத்தில் இடித்து திருடன் உயிரிழந்ததாக உடலை கைப்பற்றிய போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக நரேந்திர துபே என்பவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News