இந்தியா

மொபட்டில் குளித்தபடி சென்ற வாலிபர்- இளம்பெண்

Published On 2023-05-19 16:00 IST   |   Update On 2023-05-19 16:00:00 IST
  • வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.
  • தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் உலாஸ் நகரில் நடைபெற்ற வினோதமான சம்பவத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் குளித்து கொண்டு செல்வது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தானே நகரத்தில் உள்ள உல்காஸ் நகரின் 17-வது பிரிவு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.

அந்த பெண் தன் முன்னால் ஒரு வாளியை வைத்திருந்தார். மற்ற பயணிகள் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த ஆண் மீதும், தன் மீதும் அந்த பெண் தண்ணீரை ஊற்றி குளிப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே வீடியோ வைரலானதால் தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News