இந்தியா

மனைவி வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி கைது

Published On 2023-09-16 05:24 GMT   |   Update On 2023-09-16 05:24 GMT
  • ராதா வீட்டில் இருந்த பொருட்கள், துணிகள், படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியது.
  • போலீசார் வழக்குப்பதிந்து பாபுராஜை கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் கனிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 22). இவரது மனைவி ராதா. குடும்ப பிரச்சினை காரணமாக ராதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.

அப்போது அவரது வீட்டிற்கு பாபுராஜ் தீ வைத்திருக்கிறார். இதில் ராதா வீட்டில் இருந்த பொருட்கள், துணிகள், படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து நெடுபுழா போலீசில் ராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாபுராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News