இந்தியா

கோப்பு படம்


ஆந்திராவில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

Published On 2022-07-06 05:49 GMT   |   Update On 2022-07-06 05:49 GMT
  • பிரபாகர் ரெட்டி தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.
  • ஆந்திராவில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பிரபாகர் ரெட்டி. இவர் ஆந்திர மாநில விளையாட்டு துறை இயக்குனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி ரெட்டி. இவர்களுக்கு அலெக்ஸ் சுருதி (13), கிருஷ்ணதரன் (11) என ஒரு மகள், மகன் உள்ளனர்.

பிரபாகர் ரெட்டி தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று தனது பிள்ளைகளை அங்குள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று அலெக்ஸ் சுருதியை 8-ம் வகுப்பிலும் கிருஷ்ணதரனை 6-ம் வகுப்பிலும் ஆங்கில வழி கல்வியில் சேர்த்தார்.

ஆந்திராவில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது.

எனவே தனது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாகவும், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News