இமாச்சல பிரதேச கவர்னருக்கு திடீர் நெஞ்சுவலி- ஆஸ்பத்திரியில் அனுமதி
- கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லாவுக்கு நள்ளிரவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
- முன்னாள் மத்திய மந்திரியான சுக்லா, இமாச்சல பிரதேசத்தில் 29-வது கவர்னராக கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார்.
இமாச்சலபிரதேச மாநில கவர்னர் ஷிவ்பிரதாப் சுக்லா (70). இவர் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தஸ்கர், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த நிலையில் கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லாவுக்கு நள்ளிரவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து நொய்டாவில் உள்ள கைலாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக ஆஸ்பத்திரியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது:-
கவர்னருக்கு நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றார். முன்னாள் மத்திய மந்திரியான சுக்லா, இமாச்சல பிரதேசத்தில் 29-வது கவர்னராக கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார்.