இந்தியா

தெலுங்கானாவில் ஆளில்லா விமானங்களை வீழ்த்த கழுகு படை

Published On 2024-03-12 06:00 GMT   |   Update On 2024-03-12 06:00 GMT
  • முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
  • 2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன.

தெலுங்கானா:

தெலுங்கானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் கழுகு ஈடுபடுத்தப்படுகின்றன. முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் 3 கழுகுகளுக்கு போலீசார் மொய்னாபாத்தில் உள்ள மையத்தில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த கழுகுகள் ஆளில்லா விமானங்களை துல்லியமாக கணித்து அவற்றை கீழே இழுத்து வரும் தன்மை கொண்டது.

இதற்காக கழுகுகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த கழுகு படையை பயன்படுத்த முடியும். நெதர்லாந்தில் கழுகு படை உள்ளது. அதற்குப் பிறகு இந்தியாவிலேயே தெலுங்கானாவில் தான் போலீசார் கழுகுப்படையை உருவாக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News