இந்தியா (National)

கேரளாவில் நர்சை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது

Published On 2023-06-16 06:03 GMT   |   Update On 2023-06-16 06:03 GMT
  • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நர்சை, டாக்டர் முகமது ஷகாப் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் முகமது ஷகாப் மீது வழக்கு பதிவு செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷகாப் (வயது 49). பல் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது பெற்றோர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களை வீட்டில் இருந்து கவனித்து கொள்ள டாக்டர் முகமது ஷகாப், ஹோம் நர்சு ஒருவரை நியமித்தார். 28 வயதான அந்த நர்சு, டாக்டரின் வீட்டில் தங்கி அவரின் பெற்றோரை கவனித்து கொண்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நர்சை, டாக்டர் முகமது ஷகாப் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி நர்சு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் முகமது ஷகாப் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்ததும் அவர் வெளிநாடு தப்பி சென்றார். நேற்று முன்தினம் அவர் ஊர் திரும்பினார். இதனை அறிந்த போலீசார் கொச்சி விமான நிலையத்திற்கு சென்று டாக்டர் முகமது ஷகாப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கொடுங்கலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News