இந்தியா

ஆந்திர கோவிலில் அம்மனுக்கு 3 கிலோ தங்கத்தால் புடவை- பெண் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்

Published On 2023-05-22 04:49 GMT   |   Update On 2023-05-22 04:49 GMT
  • ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
  • கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

கோவில் நிர்வாகிகள் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 3 கிலோ எடையுள்ள தங்க சரிகை புடவை கொண்டு அலங்காரம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து 3 கிலோ தங்கத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க புடவை தயார் செய்யப்பட்டது. நேற்று கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

இதை அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அங்கு நடந்த பூஜையில் அம்மனை தரிசித்து சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சட்டப்பேரவை துணைத்தலைவர் கொலகட்லா வீரபத்ரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Tags:    

Similar News