இந்தியா

ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே தூய்மையானதாக டெல்லி விமான நிலையம் தேர்வு

Published On 2023-03-07 06:55 GMT   |   Update On 2023-03-07 06:55 GMT
  • சர்வதேச குழுவான ஏசிஐ மூலம் டெல்லி விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகவும் தேர்வு.
  • 2 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் தேர்வு.

டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தால் இயக்கப்படும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான விமான நிலைய சேவைத் தரம் வாய்ந்த சிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இதனை சர்வதேச குழுவான சர்வதேச விமான நிலைய கவுன்சில் அறிவித்துள்ளது.

இதேபோல், சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தூய்மையான விமான நிலையமாகவும் டெல்லி விமான நிலையம் தேர்வாகியுள்ளது.

மேலும், சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூலம் 2 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News