இந்தியா

கடும் பனிப்பொழிவு- இமாச்சலப்பிரதேசத்தில் 275 சாலைகள் மூடப்பட்டது

Published On 2023-01-20 12:36 IST   |   Update On 2023-01-20 12:36:00 IST
  • பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.
  • இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் கடும் பனி நிலவி வருகிறது. ரோடுகளில் பனி மூடிக் கிடக்கிறது.

சிம்லா:

டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

பனி மூட்டமும் அதிகமாக இருப்பதால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் கடும் பனி நிலவி வருகிறது. ரோடுகளில் பனி மூடிக் கிடக்கிறது.

இதையடுத்து அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. மின் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News