இந்தியா
- அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல்.
- படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநில குதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஷாஜஹான்பூரில் இருந்து பாலியா நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் கூறினார்.
பேருந்தின் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்பட 18 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.