இந்தியா

தமிழகத்தில் செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.10,481 கோடி

Published On 2023-10-01 19:00 GMT   |   Update On 2023-10-01 19:45 GMT
  • செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
  • ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக ரூ.83,633 கோடியும் வசூலாகியுள்ளது,

டெல்லி:

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,62,712 கோடி ஆக உள்ளது. இந்தாண்டில் இதுவரை 4-வது முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் 1,60 லட்சம் கோடிரூபாயை தாண்டியுள்ளது.

அதன்படி மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ,29,818 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.83,633 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலலும் தமிழகத்திலிருந்து மொத்தம் 10,481 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது,

Tags:    

Similar News