இந்தியா

பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 2-ந்தேதி தீர்ப்பு

Published On 2022-12-23 08:49 IST   |   Update On 2022-12-23 08:49:00 IST
  • பண மதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவரி 2-ந்தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவரி 2-ந்தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News