இந்தியா
3 யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர்
- லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 மாநிலங்களுக்கான கவர்னரை நியிமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி. மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.