இந்தியா

ஸ்பெயின் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2023-09-09 03:31 GMT   |   Update On 2023-09-09 03:31 GMT
  • டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
  • ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள்.

புதுடெல்லி:

ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செசும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தார். இதற்காக அவர் நேற்று இரவு இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கொரோனா தொற்று காரணமாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News