இந்தியா

செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2023-04-08 14:12 IST   |   Update On 2023-04-08 14:12:00 IST
  • பிரதமர் மோடியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சுற்றுலாவை இணைக்கும் என பிரதமர் பேச்சு

ஐதராபாத்:

தெலுங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று ஐதராபாத் வருகை தந்தார்.

ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்கிறங்கிய அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உயரதிகாரிகள், பிற முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இதன்பின்னர் பிரதமர் மோடி செகந்திராபாத் ரெயில் நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து செகந்திராபாத் -திருப்பதி வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நான் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலானது நம்பிக்கை, நவீனத்துவம், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலாவை இணைக்கும் என்றார். மேலும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை விமர்சித்தார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறிய அவர், தெலுங்கானா மக்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது கேட்டுக்கொண்டார்.

இந்த வந்தே பாரத் ரெயில் செகந்திராபாத் - திருப்பதி இடையே பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News