இந்தியா

துவாரகாவில் 37 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற கோலாகல "மஹா ராஸ்"

Published On 2023-12-24 13:24 GMT   |   Update On 2023-12-24 13:24 GMT
  • ஏசிசி சிமென்ட் நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
  • பெண்கள் உண்ணாவிரதம், மவுன விரதம் இருந்து இதில் பங்கேற்பார்கள்

குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது.

இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து "மஹா ராஸ்" (Maha Raas) திருவிழாவில் பங்கேற்றனர்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மருமகளின் நினைவாக கொண்டாடப்படும் இந்த விழாவை பாரதிய அஹிரானி மஹாராஸ் சங்கதன் (Akhil Bharatiya Ahirani Maharas Sanghathan) எனும் அமைப்பினருடன் அகில் பாரதிய யாதவ் சமாஜ் (Akhil Bharatiya Yadav ) மற்றும் அஹிரானி மஹிலா மண்டல் (Ahirani Mahila Mandal) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறுவதால், நந்த் தாம் (Nand dham) எனும் இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமான ஏசிசி சிமென்ட் (ACC Cement) நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டன.

37000 பெண்களில் பெரும்பாலோனோர் குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சுமார் 1.5 லட்சம் அஹிர் யாதவ் (Ahir Yadav) இன மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த "ராஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பக்தியுடன் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருந்து இதில் கலந்து கொள்வார்கள்.

மஹா ராஸ் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் இந்துக்களின் புனித நூலான "ஸ்ரீ பகவத் கீதை" பரிசளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில ஜம்நகர் சட்டசபை உறுப்பினர் பூனம்பென் பங்கு பெற்றார்.

Tags:    

Similar News