இந்தியா
ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜனதாவின் எண்ணமாக உள்ளது
- இதுகுறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த குழுவின் அதிகாரப்பூர்வ முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.