இந்தியா

கிராமங்களை இணைக்கும் பஸ் சேவை: ஒடிசா முதல்வர் தொடங்கி வைத்தார்

Published On 2023-12-15 11:17 IST   |   Update On 2023-12-15 11:17:00 IST
  • குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை தொடங்க ஒடிசா அரசு முடிவு.
  • கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் 63 பேருந்துகள் இயக்கம்

ஒடிசா மாநிலத்தில் கிராம புறங்களில் இருந்து நகர் பகுதிகளை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை (லட்சுமி பேருந்து சேவை) தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக 623 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதன் முதல்கட்டமாக கோரபுத் மாவட்டத்தில் இந்த சேவையினை ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் கிராமப்புற பகுதியில் இருந்து அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களுக்கு பெண்கள், மாணவ- மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5 ரூபாய் குறைந்த கட்டணத்தில் பஸ்சில் பயணம் செய்யலாம். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த பஸ் சேவையால் கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News