இந்தியா

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

Published On 2023-12-08 16:08 GMT   |   Update On 2023-12-08 16:08 GMT
  • தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
  • மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

Tags:    

Similar News