இந்தியா

வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Published On 2023-12-17 11:27 GMT   |   Update On 2023-12-18 02:29 GMT
  • மகாராஷ்டிரா வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை:

மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாக்பூர் வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மந்திரி நிதியுதவி அறிவித்துள்ளார். விரைவில் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட உள்ளேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News