இந்தியா
தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் அதிகரிப்பு.. மகாராஷ்டிர அரசு அதிரடி முடிவு
- தொழிற்சாலைகளின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது.
- தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அரசு கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இந்த சட்ட திருத்தம் மூலம், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை, மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது என்று அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா, , தெலங்கானா, உத்தரப் பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்கள் இதை அமல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.