இந்தியா

தேர்தலின்போது கொலை வழக்கில் கைதான ஜேடியு வேட்பாளர் வெற்றி

Published On 2025-11-14 16:52 IST   |   Update On 2025-11-14 16:52:00 IST
  • மொகமா தொகுதியில் வாக்கு சேகரித்த ஜன் சுராஜ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
  • விசாரணையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.

அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. கொலை வழக்கு பதியப்பட்டாலும் ஆனந்த் குமார் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Tags:    

Similar News