ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளா காங்கிரசில் இணைகிறார்
- ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கியவர்.
- ஆந்திர மாநில தேர்தல், மக்களவை தேர்தலை கணக்கில் கொண்டு காங்கிரஸ் கட்சி அவரை இணைக்கிறது.
ஆந்திர மாநில முதல்வராகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த ஒரு மாதத்திற்குள், இணைய இருக்கிறார்.
வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள், அக்கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் தங்களுடைய கட்சியில் இணையலாம் என காங்கிரஸ் நம்புகிறது.