இந்தியா

மத்திய அரசின் திட்டங்கள் குறித்த வதந்திகளை கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு

Published On 2024-03-20 16:22 GMT   |   Update On 2024-03-20 16:22 GMT
  • மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
  • இதுபோன்ற தகவல்களை உண்மை கண்டறியும் குழு சரிபார்க்கும்.

புதுடெல்லி:

மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.

அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News