இந்தியா

I.N.D.I.A. கூட்டணி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Published On 2023-08-02 06:23 GMT   |   Update On 2023-08-02 14:42 GMT
  • I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று கள ஆய்வு
  • மணிப்பூரில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து ஜனாதிபதியிடம் விவரிப்பு

I.N.D.I.A. கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் வன்முறை நடைபெற்ற இடங்களை பார்வையிட இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்து ஒரு அறிக்கை தயார் செய்தனர். இரண்டு நாள் பயணம் முடிந்த நிலையில், மணிப்பூர் மாநில கவர்னரை சந்தித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு-வை I.N.D.I.A. கூட்டணி பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது மணிப்பூர் கள நிலவரம் குறித்து தயார் செய்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.

முன்னதாக, நேற்று திடீரென அமித் ஷா ஜனாதிபதியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News