இந்தியா

சைபர்கிரைமில் உலகளவில் இந்தியாவுக்கு 10-வது இடம்

Published On 2024-04-11 14:39 GMT   |   Update On 2024-04-11 14:39 GMT
  • ரஷியா முதலிடம் பிடித்துள்ளது. உக்ரைன் 2-வது இடத்தையும், சீனா 3-வது இடத்தையும், அமெரிக்கா 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப சைபர்கிரைமின் மையமாக விளங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச குழு ஒன்று உலகளவில் இணையதள குற்றச்சாட்டுகள் அதிக அளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ரான்சம்வேர், கிரெடிட் கார்டு திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வாக இது இருந்தது.

இதில் ரஷியா முதலிடம் பிடித்துள்ளது. உக்ரைன் 2-வது இடத்தையும், சீனா 3-வது இடத்தையும், அமெரிக்கா 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. நைஜீரியா 5-வது இடத்தையும், ருமேனியா 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

வடகொரியா 7-து இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 8-வது இடத்தையும், பிரேசில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா 10-வது இடத்தை பிடித்துள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப சைபர்கிரைமின் மையமாக விளங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப சைபர்கிரைமில் குறைந்த அளவே ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News