இந்தியா

புளி விளைச்சல் அதிகரிப்பு: 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் டோலி கட்டி எடுத்து வந்து வியாபாரம்

Published On 2023-03-22 06:15 GMT   |   Update On 2023-03-22 10:26 GMT
  • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர்.
  • பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அனந்தகிரி மண்டலம் காசி பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் உள்ள புளிய மரத்தில் இந்த ஆண்டு புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.

மலை கிராமத்தை சேர்ந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் புளியம் பழங்களை சேகரித்து மூங்கில் கூடைகளில் அடைத்து டோலி கட்டி மலையிலிருந்து கீழே கொண்டுவந்து சந்தை மைதானத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர். இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புளி வியாபாரம் செய்து வருவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News