இந்தியா

மூணாறு மலை கிராமங்களில் உறைய வைக்கும் குளிர்

Published On 2023-01-20 05:24 GMT   |   Update On 2023-01-20 05:24 GMT
  • கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.
  • செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.


திருவனந்தபுரம்:

கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறிலும் கடந்த சில நாட்களாக குளிர்வாட்டி வதைக்கிறது. நேற்று மூணாறின் பல பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே இருந்தது.

இப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.

Tags:    

Similar News